இந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ4000 பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இந்த குழந்தைகளுக்கு மாதம் 4000 பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மத்திய அரசின் Mission Vatsalya நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ் நிதி பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் Mission Vatsalya திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நிதி ஆதரவுத் திட்டத்தின்கீழ்,
ப ெற்றோர் இருவரையும் இழந்த அல்லது பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள்,
எச்.ஐ.வி, எய்ட்ஸ் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் குழந்தைகள்,
சிறைவாசிகளின் குழந்தைகள், குழந்தைகள் இல்லங்கள்/சிறப்பு இல்லங்களின் கண்காணிப்பாளரால் பரிந்துரை செய்யப்படும் குழந்தைகள்,
கணவரை இழந்த / விவாகரத்தான / பெற்றோரால் கைவிடப்பட்டு பாதுகாவலர் பராமரிப்பிலுள்ள குழந்தைகள்,
விபத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு பொருளாதார வசதியின்றி குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகள்,
குழந்தைத்தொழிலாளர் அல்லது குழந்தைத்திருமணம் அல்லது பாலியல் வன்கொடுமை அல்லது இதர பிரச்சனைகளினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
உள்ளிட்ட 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கல்வி பயிலவும், தொழிற்கல்வி பயிலவும், நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு ஒப்பளிப்பு குழுவினரால் பரிந்துரை செய்யப்படும் தகுதி உள்ள குழந்தைகளுக்கு Mission Vatsalya திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளின்படி 01.04.2022 முதல் மாதம் ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த நிதி உதவி பெற கிராமபுறத்தில் வாழும் குழந்தைகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.24,000-லிருந்து ரூ.72,000 எனவும்,
நகர் புறத்தில் வாழும் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.36,000-லிருந்து ரூ.96,000 ஆக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமான வரம்பிற்குட்பட்ட மற்றும் தகுதிவாய்ந்த மேற்கண்ட வகையிலான 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், இந்த திட்டத்தில் நிதி பெற
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
2/818, வ.உ.சி.நகர்,
சூலக்கரைமேடு,
விருதுநகர் – 626003
என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04562-293946 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
Tags: முக்கிய செய்தி