Breaking News

நீலகிரியில் வெள்ளத்தில் சிக்கிய நபரை காப்பற்றும் பொதுமக்கள் வீடியோ

அட்மின் மீடியா
0

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டம் கூடலூரில் மங்குழி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்லது

  
 
மங்குழி ஆற்றை கடந்து செல்ல மங்குழி பாலம் உள்ளது பொதுமக்கள் அந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் கனமழை கடந்த சிலநாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக மங்குழி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றுப்பாலம் திடீரென உடைந்து கீழே விழுந்தது.

அப்போது பாலத்தில் நடந்து வந்து கொண்டிருந்த நபர் ஒருவர் எதிர்பாராத பாலம் உடைப்பு காரணமாக ஆற்று வெள்ளத்தில் சிக்கி கொண்டு தத்தளித்தார். தன்னை காப்பாற்றுங்கள் என கதறிய அலறல்  சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடியவரை கயிறு கட்டி இழுத்து அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அந்த மீட்பு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகின்றது

 

 

 வீடியோ பார்க்க:-

https://twitter.com/BlogTamilnadu/status/1547112837285158912

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback