Breaking News

BREAKING அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கட்சியின் உள் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது 

கட்சியில் பெரும்பாலானோர் பொதுக்குழுவை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதால் பொதுகுழுக் கூட்டம் நடத்த தடையில்லை.கட்சி விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழுவை நடத்த வேண்டும் 

என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கருத்து!

பொது குழுவிற்கு தடைவிதிக்க கோரிய ஓ பன்னீர் செல்வத்தின் கோரிக்கை நிராகரிப்பு ஒற்றை தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் பொது செயலாளர் ஆகிறார்

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.  ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரண்டு தரப்பு வாதம் நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள்  அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்கள் இந்நிலையில் சற்றுமுன் அளித்த தீர்ப்பில் BREAKING அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை இல்லை- சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback