தமிழகம் முழுவதும் 37 அதிகாரிகள் அதிரடி மாற்றம் முழு விவரம்....
அட்மின் மீடியா
0
தமிழகத்தில் தற்போது 37 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மருத்துவத்துறை முதன்மை செயலாளராக இருந்த ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேபட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி...
புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் - போக்குவரத்து துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரித்துறை கமிஷனராக இருந்த பணீந்திர ரெட்டி- உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் - வருவாய் நிர்வாகத்துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் நசீமுதீன்- தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ச
ென்னை மெட்ரோ ரயில் வாரிய மேலான் இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர் இயக்குநர் பிரதீப் யாதவ்- நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது -ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன்- புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
த
ென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ்-வணிகவரித்துறை இணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை
மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார்-
வணிகவரித்துறை கமிஷனர்/முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா- வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி கலெக்டர் சிவராசு-கோவை, வணிகவரித்துறை இணை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ம
ிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை கமிஷனர் மதிவாணன்-மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மரியம் பல்லவி பல்தேவ்- தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக விளையாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார்- மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல்- பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ப
ொருளாதாரம்
மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன்- ஊரக வளர்ச்சி மற்றும்
பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன்- கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா- உணவுபாதுகாப்பு துறை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன்- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தாட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன்- மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை முன்னாள் கலெக்டர் விஜயராணி- சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ்- வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் சந்திரகலா- தொழில் முதலீடு கழக இயக்குநராகவ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ்- போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி- சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா - திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செலயாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ச
ென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் நரனவாரே மணிஷ் ஷங்கர்ராவ்- ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக குடிநர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார்- திருச்சி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர்- மின்னணு நிர்வாகத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம், பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி- தர்மபுரி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ்- ராமநாதபுரம் கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மெட்ரோபோலிட்டன் குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ்- தென்காசி கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த உத்தரவில் தலைமை செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்