Breaking News

இந்த மாவட்டத்தில் மட்டும்.. 24ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!

அட்மின் மீடியா
0

இந்த மாவட்டத்தில் மட்டும்.. 24ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!!!11


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வருடந்தோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். உலக புகழ் பெற்ற ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வருடம் ஜூன் 23ல் தொடங்கி ஜூன் 24 காலை வரை நடைபெறுகிறது. 

இந்நிலையில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ஜூன் 24ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏா்வாடியில் அல்குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தா்ஹா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், வரும் ஜூலை 2 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. ஆகவே வரும் 24 ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்டப் பணியாளா்களோடு செயல்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback