Breaking News

மார்ச் 8ம் தேதி உள்ளூர் விழுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரியில் மார்ச் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



கன்னியாகுமரியில் மிகவும் பிரசித்திபெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் மாசிக்கொடை  திருவிழா மார்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

எனவே அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய பணிகளுக்காக தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்களில் மட்டும் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி 2வது சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback