Breaking News

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

அட்மின் மீடியா
0

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை திறக்க வேண்டும் - பள்ளிக்கல்வித் துறை உத்தரவு



தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டது. அதன்பின்னர் கொரானா சற்று குறைந்த பிறகு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை படிப்படியாக அளித்து வந்தது. இதில், பள்ளிகள், கல்வி நிலையங்கள் திறக்க  முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. 

இந்த நேரத்தில் பண்டிகை விடுமுறை மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இனி தமிழகத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback