செப்.1 முதல் அனைத்து வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ் 5 ஆண்டுகளுக்கு கட்டாயம் உயர் நீதிமன்றம் உத்தரவு!
அட்மின் மீடியா
0
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் பம்பர் டூ பம்பர் காப்பீடு செய்வதை கட்டாயமாக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாகன உரிமையாளர், ஓட்டுநர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
காப்பீடு நிறுவனங்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு போக்குவரத்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 30-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளது.
விபத்து சம்மந்தமான வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை அளித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்