ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ2000/- ரொக்கம் மற்றும் 13 வகை மளிகைப்பொருட்கள் தொகுப்பு !
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கொரானா நிவாரண நிதி 2வது தவனையாக ரூ 2,000 வழங்கும் திட்டத்தையும் 13 வகையான மளிகைப் பொருள் வழங்கும் திட்டம் -முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முதல் கையெழுத்தாக கொரானா நிவாரண நிதியாக 4000 வழங்கப்படும் அதில் முதல் தவனையாக உடனடியாக ரூ. 2,000 வழங்கப்படும் என கையெழுத்திட்டார்
அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் முதல் தவணையாக ரூ. 2,000 வழங்கப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் முதல்வரும் தமிழக முதல்வரின் தந்தையுமான கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரண்டாம் தவணையாக ரூ. 2,000 தொகையும், 14 வகையான மளிகைப் பொருள்கள் கொண்ட தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கோதுமை,
ரவை,
சர்க்கரை,
உப்பு,
புளி,
மஞ்சள் தூள்,
கடுகு,
பருப்பு,
சீரகம்,
குளியல் சோப்,
சலவை சோப்
உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
Tags: தமிழக செய்திகள்