Breaking News

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 14 ம் தேதிவரை நீடிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரியில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீடிப்பதுடன் சில தளர்வுகளும் அளிக்க முடிவு செய்யப்பட்டது.அதன் படி ஜூன் 14 ம் தேதிவரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்லது



அதன்படி புதுச்சேரியில் அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஓட்டல்களில் மாலை 5 மணி வரை பார்சல் வினியோகம் செய்யலாம்.

அனைத்து தனியார் அலுவலகங்களும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

பெரிய மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

அரசு மற்றும் தனியார் பஸ்கள் மாலை 5 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது. 

பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படலாம்.

அனைத்து வழிபாட்டு தலங்களும் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

சாராயம், கள், மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாராயம், கள், மதுக்கடைகள் செயல்படலாம். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback