தேர்தல் கருத்துக்கணிப்புக்கு ஏப்ரல் 29-ம் தேதி வரை தடை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட இன்று காலை ஏழு மணி முதல் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும் மாரச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, அதன் முடிவுகளை அச்சு மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் அல்லது வேறு விதத்தில் வெளியிட தடை விதிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ உத்தரவை படிக்க
Tags: தமிழக செய்திகள்