இனி கேஸ் புக்கிங் செய்த உடனே சிலிண்டர் டெலிவரி செய்ய தட்கல் திட்டம் விரைவில்...
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் புக்கிங் செய்த உடனே சிலிண்டர் டெலிவரி செய்ய தட்கல் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
விரைவில் இத்திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக சிலிண்டர் புக்கிங் செய்த 2, 3 நாட்களில் சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்
இனி புதிய சிலிண்டருக்கு புக்கிங் செய்தவுடனே சிலிண்டரை டெலிவரி செய்யும் தட்கல் முறையை அமல்படுத்தவுள்ளனர். இந்த தட்கல் முறையில் வாடிக்கையாளர் புக்கிங் செய்த நாளிலேயே அவர்களின் வீட்டிற்கு சிலிண்டர் டெலிவரி ஆகிவிடும். தட்கல் எல்பிஜி சேவா மூலம் வெறும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கு சிலிண்டர் டெலிவரி கிடைக்கும் இச்சேவை கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
Source:
Tags: தமிழக செய்திகள்