இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த 6.2 நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு வீடியோ இணைப்பு
அட்மின் மீடியா
0
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவானது இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிகை 35ஆக உயர்ந்துள்ளது. மேலும் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் சாலைகள், வீடுகள்,உணவகங்கள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன. மேலும் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
Destructive #Earthquake of 6.2 magnitude hits Indonesia's #Sulawesi island😔💔
— Hina (@HinaShaheeen) January 15, 2021
May Allah Almighty help them to pass through this calamity.
Prayers from Pakistan 💔
#Indonesia #Earthquake pic.twitter.com/Mjfplrotjw
Tags: வெளிநாட்டு செய்திகள்