Breaking News

27 ஆம் தேதி சசிகலா விடுதலை உறுதி.., சிறைதுறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 கடந்த 4 ஆண்டுகளாக சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலாவின் தண்டனைக் காலம் முடிந்து அவர் நாளை மறுநாள் 27ஆம் தேதி விடுதலை ஆகவுள்ளார்.



சசிகலா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிப்பட்டுவந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கியதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படவுள்ளார் என சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் சசிகலாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். COVID-19 தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் சசிகலா விடுதலை தொடர்பாக ஆவணப் பணிகள் இன்றே முடிக்கப்படுவதாக தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback