Breaking News

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பதா? தளர்வுகள் அளிப்பதா? முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றின் நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.


கடந்த மார்ச் 25-ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின், அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

அந்த வகையில், கடந்த அக்டோபர் இறுதியில் 10-ம் கட்டமாக நவ. 30-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.தற்போது ஊரடங்கு காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த கட்டமாக, தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்வதா? தளர்வுகளை அளிப்பதா? என்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று முடிவு செய்கிறார்.

இதற்காக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, இன்று பிற்பகல் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டங்களில், டிசம்பர் மாத ஊரடங்கு தொடர்பாகவும் முதலமைச்சர் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனையும் கூட்டத்தில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback