7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொலை:
அட்மின் மீடியா
0
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி அம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் நாகூரான் இவர்களது 7 வயது மகள் ஜெயப்பிரியா இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார்.தனது மகள் நேற்று செவ்வாய் கிழமை முதல் காணவில்லை என்று ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை பதிவு செய்த போலலீசார் விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று புதன் கிழமை மாலை அதேபகுதியில் உள்ள கருவேல மரங்கள் அடர்ந்த கண்மாய் கரையில் சிறுமி சடலமாக கிடப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிறுமியின் உடலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான அடையாளமும், அவரது ஆடைகள் கலைந்தும் இருந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமி பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் ராஜேஷ் (வயது 25) என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், சிறுமியின் கொலைக்கான காரணம் தொடர்பாக, ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags: தமிழக செய்திகள்