Breaking News

ரயில் பயணிகளுக்கு இ பாஸ் கட்டாயம்: விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்க

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து 4 சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ளது.



மதுரை – விழுப்புரம் வண்டி எண் 02636 சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் வண்டி எண் 02635 விழுப்புரம் – மதுரை சிறப்பு ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 09.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

திருச்சி – நாகர்கோவில் வண்டி எண் 02627 சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 02628 நாகர்கோயில் – திருச்சி சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து இரவு 07.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 


கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:02084)  செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். 

மறு மார்க்கமாக மயிலாடுதுறை-கோவை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (02083) செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும்.


கோவை-காட்பாடி 'இன்டர்சிட்டி' சிறப்பு எக்ஸ்பிரஸ்(02680), காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 11.50 மணிக்கு காட்பாடி சென்றடையும். 

இதைப்போல் காட்பாடி-கோவை 'இன்ட்டர்சிட்டி' சிறப்பு எக்ஸ்பிரஸ்(02679) காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்நிலையில் இன்று தமிழகத்தில் 4 வழித்தடங்களில் செல்லும் ரயிலில் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என ரயில்வே தெரிவித்துள்ளது. 

உதாரணமாக காட்பாடியில் இருந்து கோவை ரயிலில் சென்றால் இ-பாஸ் பெற்றிருக்க வேண்டும். மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் தேவை என தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் நோய் தொற்று இல்லாத பயணிகள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதிக்கப்படுவர். 

ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன் ரயில் நிலையத்திற்கு பயணிகள் வரவேண்டும். 

பயணச்சீட்டு உள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

பயணிகள் உணவு மற்றும் இதர உணவுப் பொருட்களை வீட்டிலிருந்தே கொண்டுவர வேண்டும் எனவும் ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

இ பாஸ் விண்ணப்பிக்க: 


 நீங்கள் ரயிலில் பயணிக்கப் போகிறீர்கள் என்றால், வேறு எந்த வகையிலும் விண்ணப்பிக்க வேண்டாம் - உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.






Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback