Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்கள் கல்லூரி படிக்க நவாஸ்கனி சொந்த செலவில் வழங்கும் உயர் கல்வி உதவித் திட்டம் - உடனே விண்ணப்பியுங்கள் முழு விவரம் இதோ k.navaskani scholar scholarship scheme

அட்மின் மீடியா
0

இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ  மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்

விண்ணப்பங்கள் 30, மே 2025 (30-05-2025) க்குள் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-  https://forms.gle/pmX7Bj53XqwRuAz96

திறமை இருந்தும் பொருளாதாரத் தடையினால் உயர்கல்வியை தொடர முடியாத இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தன் சொந்த நிதியிலிருந்து கடந்த 6 ஆண்டுகளாக உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூபாய் 1 கோடியே 26 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.



தொடர்ந்து ஆறு ஆண்டுகளில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியைச் சார்ந்த சுமார் 4200 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாகிய திட்டம். தற்போது ஏழாவது ஆண்டாக

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி அவர்களின் உயர் கல்வி உதவித் திட்டம் - 2025





விண்ணப்பிக்க:-

https://forms.gle/pmX7Bj53XqwRuAz96


விதிமுறைகள் :-

1. இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

2. விண்ணப்பித்த மாணவர்களின் தேர்வு செய்யப்பட்ட 600 மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவி வழங்கப்படும். 

3. வரும் 30.05.2025  க்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். 

4. தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் கல்வி உதவியானது நேரடியாக தேர்வு செய்யப்பட்ட கல்லூரிக்கே வழங்கப்படும். 

5. கல்வி உதவியானது எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களிடமோ, பெற்றோர்களிடமோ கொடுக்கப்படமாட்டாது. 

6. மாணவர்கள் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து விட்டு கட்டணத்தை செலுத்துமாறு கேட்கக் கூடாது. 

7. மாணவர்கள் தங்களின் சுய விருப்பத்திற்கேற்ப திட்டமிடுதலுடன் கல்லூரியையும், படிக்கும் துறையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். 

8. எம்பி அலுவலகம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். 

9. மாணவர்கள் அளிக்கும் தகவல்கள் மற்றும் கள ஆய்வு மூலமாக மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

10. தகுதியுடைய மாணவர்கள் மற்றும் திறமையான மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள். மாணவர்களுக்கு இடையில் எந்த பாகுபாடும் கட்டாயமாக பார்க்கப்பட மாட்டாது. 

11. இவ்வாண்டு + 2 முடித்த மாணவர்கள் அல்லது ஏற்கனவே இத்திட்டத்தில் கல்வி உதவி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

12. கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வண்ணம், கட்டணம் செலுத்த வசதி படைத்த மாணவர்கள் விண்ணப்பிப்பதை தவிர்க்கவும்.

Tags: மார்க்க செய்தி

Give Us Your Feedback