இந்த மீன் வந்தால் உலகமே அழியும் என பரவும் வீடியோ உண்மை என்ன doomsday fish fact check
அட்மின் மீடியா
0
இந்த மீன் வந்தால் உலகமே அழியும் என பரவும் வீடியோ உண்மை என்ன doomsday fish fact check
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலான இந்த செய்தி பரவலாக ஷேர் செய்து வருகின்றார்கள்
பரவும் செய்தி:-
Doomsday மீன்.. அதாவது உலக அழிவிற்கான மீன் என்று அழைக்கப்படும் ஓர் மீன் தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்டு உள்ளது.
அரிதாகவே காணப்படும் ஆழ்கடல் உயிரினம்தான் ஓர் மீன் எனப்படும் துடுப்பு மீன் பல்வேறு கலாச்சாரங்களில், குறிப்பாக ஜப்பானில் இது பெரும்பாலும் "டூம்ஸ்டே மீன்" அல்லது "பூகம்ப மீன்" என்று செல்லப்பெயர் பெற்றது
அதவாது இந்த மீன் வந்தால் .. வெளியே பிடிபட்டால் உலக அழிவின் அறிகுறி, சுனாமி, நிலநடுக்கங்கள் அறிகுறி, இந்த மீன் வருவது..பூமியில் நடக்க போகும் பெரிய மாற்றத்திற்கான அறிகுறி மேலும் இந்த உலகின் இறுதி நாட்களை உணர்த்த பல விஷயங்களை பூமி நம் கண்ணில் காட்டும். அதில் இந்த மீன் வருவதும் ஒன்று என்றனர்...
உண்மை என்ன:-
Oar fish ஃபிஷ் என்ற இயற்பெயர் கொண்ட இந்த மீன் பொதுவாக ஆழ்கடலில் வாழும் மீன் ஆகும். அதாவது கடலின் மேற்பரப்பிலிருந்து 660 அடி முதல் 3300 அடிக்கு இடைப்பட்ட நீர் பரப்பில் வாழும்.
பார்ப்பதற்கு வாளை மீனைப் போன்ற உருவத்தைக் கொண்டிருந்தாலும் 23 அடிவரை வளரக் கூடியது.
அதாவது இவ்வளவு ஆழத்தில் நீரின் அழுத்தம் அதிகமாக இருக்கும். இத்தகைய அழுத்ததில் வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மீன் இந்த ஆழத்தை விட குறைவான ஆழத்திற்கு வராது. மேலும் ஏதேனும் காரணத்தால் அவ்வாறு அது வந்துவிட்டால் நீரின் அழுத்தம் குறைவின் காரணமாக இறந்துவிடும்.
கட்டுக்கதைகள்:-
ஜப்பானிய நாட்டுப்புறக் கதைகளில் , துடுப்பு மீன்கள் "கடல் கடவுளின் அரண்மனையிலிருந்து வந்த தூதர்" என்று அழைக்கப்படுகின்றன,
மேலும் அவை பேரழிவுகளின் முன்னோடிகளாகக் கருதப்படுகின்றன, அவை பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள் ஏற்படுவதற்கு முன்பு தோன்றுவதாகக் கூறப்படுகிறது. துடுப்பு மீன்களின் தோற்றம் இயற்கை பேரழிவுகளுடன் தொடர்புடையது என்றாலும், இந்தக் கூற்றுகளை ஆதரிக்க எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கூடுதலாக, துடுப்பு மீன்கள் தோன்றுவது ஒரு பூகம்பத்தை சமிக்ஞை செய்வதாக இடுகைகள் கூறினாலும், பூகம்பத்தின் சரியான தேதி, நேரம், இடம் மற்றும் அளவை யாராலும் கணிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் பலமுறை வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் உலகின் பல்வேறு காலகட்டங்களில் அவ்வப்போது இந்த துடுப்பு மீன்கள் மேலே வந்த சம்பவங்கள் முன்பு நடந்துள்ளன. இந்த மீன்கள் தோன்றுவது மூடநம்பிக்கைகளைத் தூண்டியிருந்தாலும், இந்த வகையான ஆழ்கடல் உயிரினங்கள் பொதுவாக உயிர்வாழ்வதற்காக, பாதுகாப்பிற்காக அல்லது உணவுக்காக தங்கள் இயற்கையான வாழ்விடத்தை விட்டு வெளியேறுவதால், இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் அமைப்பு அழிவைக் குறிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி