கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய அரசுப் பேருந்து - ஒருவர் உயிரிழப்பு வீடியோ
கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கிய அரசுப் பேருந்து - ஒருவர் உயிரிழப்பு வீடியோ
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து பாபநாசம் வரை அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து தினமும் காலை, மாலை என 3 முறை ஆலங்குளத்தில் இருந்து இயங்கப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கம்போல் இந்த இன்று (05.06.2025) ஆலங்குளத்தில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து நெல்லை மாவட்டம் பாபநாசத்திற்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை ஓட்டுநர் முருகேஷ் ஓட்டி வந்தார்.
இந்த பேருந்தானது ஆலங்குளத்தில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் இடைகால் விலக்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள விவசாயநிலத்தில் பாய்ந்தது.
இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் மூன்று பேர் சாலையில் விழுந்து காயம் அடைந்தனர் .தொடர்ந்து அவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் பேருந்தின் ஸ்டேரிங் என்ட் கட்டானதால் இந்த விபத்து நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஜெயலெட்சுமி (43) என்ற பெண்மணி பலத்தகாயத்துடன் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1930630148925350239?t=YKglUTtbvfZjyf2ac7cfvQ&s=19
Tags: வைரல் வீடியோ