முத்துப்பேட்டை ஷாஹின் பாக் 7 ம் நாளாக தொடரும் போராட்டம்
அட்மின் மீடியா
0
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை புதுத்தெரு திடலில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...
பகுதியில் கடந்த 15 ம் தேதி ஆரம்பிக்கபட்ட போராட்டம் இன்று 7 வது நாளாக தொடர்கின்றது
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் முத்துப்பட்டினத்தில் தொடர் முழக்க போராட்டம் நடந்து வருகின்ரது
அதிரை ஜாவியா சாலையில் நடைபெற்று வரும் இந்த தொடர் முழக்க போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.
Tags: தமிழக ஷாஹீன்பாக்