Breaking News

தமிழ்நாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலியான சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நடந்த சாலை விபத்தில் திண்டுக்கல் PSNA கல்லூரி மாணவர்கள் 7 பேர் மற்றும் ஓட்டுநர் உயிரிழப்பு



திருச்சூர்,கேரளாவில் லாரி மீது கார் மோதியதில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அப்பகுதியில் சாலையோரம் சரக்கு லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. இரவு சுமார் 11:40 மணியளவில் அந்த வழியாக வந்த தமிழகத்தின் பதிவு எண் கொண்ட கார் ஒன்று, சரக்கு லாரியின் பின்புறத்தில் கடுமையாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் முற்றிலுமாகச் சிதைந்து, அப்பளம் போல் நொறுங்கி உள்ளே இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்தனர். இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் உயிரிழந்த எட்டு பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியின் மாணவர்கள் என்றும், குருவாயூரிலிருந்து கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ​​கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர்கள் / அடையாளம் காணப்பட்டவர்கள்

விஸ்வா, 20 வயது - 

சேலம் , சூர்யா, 20 வயது - 

சந்தோஷ், 20 வயது - 

பிரசன்னா - 

யுவசஞ்சித், 20 வயது 

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/2096410227663118343



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback