ஆழ்குழாய் கிணறுகளை மூடாதீர்கள்- குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு
அட்மின் மீடியா
0
அட்மின் மீடியாவி கோரிக்கைக்கு செவி சாய்த்த தமிழக அரசுக்கு நன்றி....
இந்த நிலையில், ஆழ்துளைக் கிணறுகளால் இனி யாருக்கும் எவ்வித பாதிப்பும் நேராமல் இருப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாடற்ற நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்றியமைக்க வேண்டும்.
இதேபோன்று, திறந்தவெளி கிணறுகள், நீர் உறிஞ்சும் கிணறுகளையும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும். இந்தப் பணிகளை வாரியத்தின் பொறியாளர்கள் 24 மணிநேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.
இந்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு குடிநீர் வாரிய பொறியாளர்களுக்கு அதன் மேலாண்மை இயக்குநர் மகேஸ்வரன் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தங்களுக்கு சொந்தமான ஆழ்துளைக் கிணறுகளை மூட விரும்பும் தனிநபர்கள் இதுதொடர்பாக, வாரியத்தின் ஆலோசனைகளை பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு 94458 02145 என்ற மொபைல் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இது போன்ற உத்தரவை பிறபிக்கத்தான் அட்மின் மீடியா கடந்த 3 தினங்களாக போராடியது.
இது நம் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.....
தமிழக அரசுக்கு நாம் வைத்த கோரிக்கையை படிக்க
https://www.adminmedia.in/2019/10/blog-post_362.html
Tags: முக்கிய செய்தி