பைக்கில் வளைவில் திரும்பும் போது வழுக்கி நேரே மோதி ..ஒரே நொடியில் பிரிந்த இளைஞரின் உயிர் - அதிர்ச்சி வீடியோ
அதி வேகம் ஆபத்து - வளைவில் திரும்பும் போது நேரே மோதி ..ஒரே நொடியில் பிரிந்த இளைஞரின் உயிர் - அதிர்ச்சி வீடியோ

தெலங்கானாவைச் சேர்ந்த 21 வயது மாணவர் அஷ்ரித் வியட்நாமில் தங்கி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 4 ம் தேதி கல்லூரியில் இருந்து பைக்கில் தனது 150cc பைக்கில் நண்பருடன் விடுதிக்கு செல்லும் போது வளைவில் கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதினார். இதில் அர்ஷித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கோர விபத்து சம்பவம் குறித்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த அர்ஷித், தெலங்கானா மாநிலத்தின் காகசுநகர் நகரில் வசித்து வரும் அர்ஜுன் என்பவரது மகன் ஆவார்.மருத்துவக் கனவுடன் வெளிநாட்டில் கல்வி படித்து வந்த இளம் மாணவனின் மரணம், அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
*வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்*
https://x.com/adminmedia1/status/1931294512631914975
Tags: இந்திய செய்திகள்