Breaking News

FACT CHECK: துபாயில் தொழிலதிபர் தற்கொலை ! யார் அவர்? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கலில் பலரும் ஜாய் ஆலுக்காஸ் அதிபர் துபாயில் தற்கொலை என்று  ஒரு புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா கள ம் கண்டது


அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


முதலில் அவர் ஜாய் ஆலுக்காஸின் அதிபர் கிடையாது

மாறாக அவர் கேரளத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழிலதிபர் ஜாய் அரக்கல்  என்பவர் ஆவார்


இவர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி துபாயில் உள்ள பிசினஸ் பே என்ற வணிகக் கட்டடத்தின் 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இவரைத்தான் ஜாய் ஆலுக்காஸ் அதிபர் என்று தவறான பெயரால் பரப்பப்படுகிறது.

உண்மையான ஜாய் ஆலுக்காஸ் அதிபர் வேறு ஒருவர் ஆவார்

இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து ஜாய் அலுக்காஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியா ஆதாரம்

அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback