இன்று இரவு 9 மணிக்கு 9 கோள்களும் ஒரே நேர்கோட்டில் வருகின்ரது என நாசா அறிவித்துள்ளதா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
இன்று இரவு 9 மணி முதல் 9.09 வரை ஒன்பது கிரகங்களும் நேர்கோட்டில் அமையும் என நாசா உறுதி செய்துள்ளது என்ற ஒரு செய்தியினை சமூக வலைதலங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்ப வேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன
பிரதமர் மோடி அவர்கள் இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அனைத்து விட்டு டார்ச்லைட், அகல் விளக்குகள், செல்போன் லைட், மெழுகுவர்த்தி உள்ளிட்டவையை உபயோகிக்க வேண்டுகோள் வைத்தார்.
இந்த தகவலை நாசா ஆராய்ச்சி செய்து இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அனைக்க வேண்டும் என்றும் அன்றையதினம் 9 கிரகங்களும் ஒரே நேர் கோட்டில் வருகின்றது ஆகையால் தான் பிரதமர் அறிவித்துள்ளார் என ஒரு செய்தியினை சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள்
ஆனால் அது போன்ற அறிவிப்பை நாசா இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை
உண்மை என்ன வென்றால் நாசா பெயரில் பரவும் பொய்யான செய்தி இது இதுபோல் நாசா அறிவிக்கவில்லை என தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது
அட்மின் மீடியா ஆதாரம்
If you look out your window this evening, you might be rewarded with a brilliant view of Venus, which will pass near a star cluster known as the Pleiades. Don’t miss your chance — Venus won’t make another appearance this close to the Pleiades until 2028: https://t.co/nUPLUgnaT0 pic.twitter.com/FKGLja2Svv— NASA (@NASA) April 3, 2020
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி