விருதுநகர் மாவட்டத்தில் வெடித்து சிதறிய கல்குவாரி அதிரவைக்கும் சிசிடிவி வீடியோ 4 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டத்தில் வெடித்து சிதறிய கல்குவாரி அதிரவைக்கும் சிசிடிவி வீடியோ 4 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஆவியூர் - கீழ உப்பிலிக் குண்டு சாலையில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை, வேனில் ஏற்றும் பணியில் மூன்று தொழிலாளா்கள் ஈடுபட்டனா். அப்போது வெடிபொருட்கள் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதில், அந்த அறை வெடித்து சிதறியது.
இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த திருமால் புதுப்பட்டியைச் சோ்ந்த அழகா்சாமி மகன் கந்தசாமி (47), சங்கரன்கோவில் பகுதியைச் சோ்ந்த துரை (25), குருசாமி (60) ஆகியோா் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினாா். மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 8 போ் காரியாபட்டி, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து தொடா்பாக ஆவியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,கல்குவாரி உரிமையாளரான சேதுராமன் மற்றும் வெடிபொருள் விற்பனைக்கு அனுமதி பெற்ற சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ராஜ்குமாா் என்பவரை தனிப்படை போலீசார் போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், கல்குவாரி உரிமையாளரான சேதுராமன் ஆவியூா் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.
மேலும் வெடி விபத்து சம்மந்தமான சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://twitter.com/SundarSubbiah/status/1785547595135529244
Tags: தமிழக செய்திகள்