Breaking News

தொடங்கியது வடகிழக்கு பருவமழை இன்று 12 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம் today weather

அட்மின் மீடியா
0

 தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில், மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.இன்று தொடங்கும் வடகிழக்கு பருவமழை நவம்பர் 4ஆம் தேதி வரைக்கும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. 


இதனால் தமிழகத்தில் இன்று தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான, லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இன்று கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், அரியலூர், நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்களிலும், காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது .

வானிலை ஆய்வு மைய அறிக்கை:-

https://mausam.imd.gov.in/chennai/mcdata/tamilrain_fc.pdf


வடகிழக்கு பருவமழை

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback