கடும் எதிர்ப்பை அடுத்து கருவுற்ற பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவை வாபஸ் பெற்றது எஸ்பிஐ வங்கி
கடும் எதிர்ப்பினை அடுத்து, 3 மாதத்திற்கு மேலாக கருவுற்ற பெண்களை " தற்காலிக தகுதியற்றவர்கள் " என குறிக்கும் வழிகாட்டுதலை எஸ்பிஐ வங்கி திருப்ப பெற்றது
பாரத ஸ்டேட் வங்கியின் புதிய வழிகாட்டுதலில், மூன்று மாத கர்ப்பிணி பெண்களுக்கு பணி இல்லை என்ற உத்தரவை SBI திரும்பப்பெற்றது.நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான
பாரத ஸ்டேட் வங்கி புதிதாக ஆட்சேர்ப்பு , பதவி உயர்வுகளுக்கான மருத்துவ உடற்தகுதி வழிகாட்டுதல்களில், 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணி பெண்கள் பணிக்கு சேரும் தகுதி இருந்தாலும், அவர் தற்காலிகமாக தகுதியற்றவர்களாக கருத வேண்டும்.குழந்தை பெற்ற பிறகு 4 மாதங்கள் பிறகு தான் அவருக்கு பணி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தது. பாரத ஸ்டேட் வங்கியின் இந்த செயலுக்கு இதற்க்கு பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்தனர்.
இது குறித்து தன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
கொரோனா காலகட்டத்தில், அரசாங்க அறிவுறுத்தல்களின்படி, கர்ப்பிணிப் பெண் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் செல்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை கைவிடவும், இந்த விஷயத்தில் ஏற்கனவே உள்ள வழிமுறைகளைத் தொடரவும் எஸ்பிஐ முடிவு செய்துள்ளது” என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்