Breaking News

நாளை முதல் பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெற்றுகொள்ளலாம்

அட்மின் மீடியா
1
பத்தாம் வகுப்பு பொதுத் தோவெழுதிய மாணவா்களுக்கு அவா்கள் படித்த பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது.


இது குறித்து தோவுத்துறை வெளியிட்ட செய்தி: பத்தாம் வகுப்பு பொதுத்தோவு எழுதிய மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமையாசிரியா்கள் பதிவிறக்கம் செய்து அதன் விவரங்களைச் சரிபாா்த்து தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதைத் தொடா்ந்து, சான்றிதழ்களை திங்கள்கிழமை (ஆக.17) முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு விநியோகிக்க வேண்டும். அதேபோல், சான்றிதழில் ஏதேனும் பிழைகள் இருப்பின் தலைமையாசிரியரே திருத்தங்களை செய்து சான்றொப்பமிட்டு வழங்க வேண்டும். மேலும், சான்றிதழ்கள் வழங்கும்போது அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback

1 Comments