Breaking News

லதா மேடம் ஆடியோ உண்மையா? சூரிய ஒளி நம் மீது பட்டால் கொரானா வருமா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
5

இன்று காலை முதல் பலரும் ஒரு ஆடியோவை ஷேர் செய்கின்றார்கள் அந்த ஆடியோவில்  ஹாய் பிரதர்ஸ், நான் லதா மேடம் பேசுறேன், சன்டே 22-ம் தேதி இந்தியாவில் கொரோனா வைரசின் போர்த் வேவ்ஸ் நேரடியாக சூரிய ஒளி மூலம் வருகிறது. 144 சட்டம்போட்டு  வெளியே வராதீங்கனு  சொல்கிறார்களே தவிர உண்மையான நிலவரத்தை சொல்லவில்லை. சன்டே மட்டும் சூரிய ஒளி உங்கள் உடலில் படாமல் பாத்துக் கொள்ளவும். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை யாரும் வெளியே செல்ல வேண்டாம். இது இத்தாலியிலும், சீனாவிலும் வந்து விட்டது. என ஒரு செய்தியினை ஷேர் செய்கின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 
 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன


கொரோனா வைரஸை விட கொரானா வதந்திகள் தான் அதைவிட வேகமாக பரவுகின்றது மார்ச் 22-ம் தேதி மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்ற ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தார் ஆனால் அதனை குறித்த வதந்திகள் அதிகம் பரவுகின்றன்

அந்த வரிசையில் லதா என்பவர் மார்ச் 22-ம் தேதி சூரிய ஒளியின் மூலம் கொரோனா வைரஸ் வருவதால் அன்று மட்டும் சூரிய ஒளி உடலில் படாமல் பாத்துக் கொள்ளவும் எனக் கூறும் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது கற்பனை கலந்து கூறிய கதை எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள். நீங்கள் ஷேர் செய்யும் பொய்யான செய்தியினால் காவல் துறை நடவடிக்கை உங்கள் மீதும் பாயும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்

கொரானா குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கைது என ஏற்கனவே காவல்துறை அறிவித்துள்ளது

அட்மின் மீடியா ஆதாரம்




Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

5 Comments

  1. சூரிய ஒளியின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பது உண்மை அப்போ நாளை ஊறடங்கு உத்தரவு எதனால் பிரப்பிக்க பட்டுள்ளது என்பதை அட்மின் மீடியா தெளிவு படுத்தவும்

    ReplyDelete
  2. சூரிய ஒளியின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்பது உண்மை அப்போ நாளை ஊறடங்கு உத்தரவு எதனால் பிரப்பிக்க பட்டுள்ளது என்பதை அட்மின் மீடியா தெளிவு படுத்தவும்

    ReplyDelete
  3. ஒரு சில நேரங்களில் வதந்தி கூட உதவி செய்யும், வெளியே வராதீங்க கொரோனா பரவிரும்னு சொன்னா அதை அலட்சியம் செய்வார்கள், சூரிய ஒளி பட்டா கொரோனா வரும்னா பயந்து கொண்டு வெளியே வர மாட்டார்கள்

    ReplyDelete
  4. சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் திருதணிகாச்சலம் அவர்கள் கொரானோ வுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக சொல்லி வருகிறார். அவர் சொல்லி வருவது உண்மையா என்று ஆராய்ந்து உண்மையை மக்களிடம் சொல்லவும்.

    ReplyDelete