Breaking News

FACT CHECK உ.பியில் பசுவை தாக்கியதற்காக போலிசாரால் தாக்கப்பட்டாரா? உண்மை என்ன முழு விவரம்...

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  உத்தர பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த கன்றுக்குட்டி யை எவ்வாறு மூச்சு குழாயை நசுக்கி கொன்று விட்டு அதனை பின்னர் பலர் கூட்டு சேர்ந்து வெட்டி பகிர்ந்து சாப்பிட்டு விட்டான் கள். காவல் துறை க்கு தகவல் கிட்டியதும் காவல்துறை அதிகாரிகள் வந்து அவனுக்கு எப்படி அவனின் வீர தீர செயலை பாராட்டி சன்மானம் கொடுத்தார்கள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள தகவல் பொய்யனது ஆகும், 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் உள்ள சந்தௌலி மாவட்டத்தில்  உள்ள பாலுவா காவல்நிலையத்தில் 06.05.2021 அன்று நடந்தது ஆகும்
 
அந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மத்தேலா கிராமத்தில் உள்ள மொபைல் கடையில் நடந்த திருட்டு சம்மந்தமாக 3 சிறுவர்களை போலிசர் அடித்த காட்சிதான் அது
 
அந்த விடியோ அப்போது வைரல் ஆனதை தொடர்ந்து  அந்த போலீசார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்
 
ஆனால் சிலர் அந்த சம்பவம் தற்போது நடந்தது போன்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

 https://www.youtube.com/watch?v=ktBP8M7wyxY&t=9s

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback